districts

img

சாலை விபத்தில் பலியானோர் உடல்களுக்கு அமைச்சர் காந்தி அஞ்சலி

ராணிப்பேட்டை, செப். 26 -  ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றவர்கள் புதனன்று வீடு திரும்பும் வழியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் கலவை வட்டத்தை சேர்ந்த 6பேர் உயிரிழந்தனர். மாம்பாக்கம் செல்வம் (50), துரை (43), ராமலிங்கம் (50), செல்வன். சக்தி (15), முருகன் (52), ரவி (58) ஆகியோரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வியாழனன்று (செப். 26) மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பிறகு, பலியானோர் குடும்பத்தினருக்கு  முதலமைச்சர் சார்பில் ஆறுதல் கூறிய அமைச்சர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் காசோலை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், சிபிஎம் செயலாளர் எஸ். கிட்டு, மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரகுபதி, கிளைச் செய லாளர்கள், ஒன்றியக் குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அசோக், துணைத் தலைவர்கள் ரமேஷ், ஸ்ரீமதி நந்த குமார், வருவாய் கோட்டாட்சியர் இராஜ ராஜன், வட்டாட்சியர் சுரேஷ், அருள் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.