ராணிப்பேட்டை, அக்.20 - ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி, லாலாபேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 143 மாணவிகளுக்கு ரூ.6.90 லட்சத்தில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 54 பயனாளிகளுக்கு ரூ.14.33 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டாட்சியர் அருள்செல்வம், தலைமையாசிரியர் காவேரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பரந்தாமன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.