சென்னை, நவ. 10- திருவொற்றியூர் - எண்ணூர் பகுதி 24ஆவது மாநாடு சனிக் கிழமை, ஞாயிற்றுக்கிழமை (நவ. 9,10) இரண்டு நாட்கள் நடை பெற்றது. மூத்த தோழர் எம்.சாரங்கபாணி கட்சிக் கொடியை ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.செல்வ குமாரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன் களப்பணியில் கம்யூ னிஸ்டுகள் கண்காட்சியை திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் எஸ்.கதிர்வேல் வேலை அறிக்கையையும், பகுதிக்குழு உறுப்பினர் கே.சுரேஷ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்ன தாக பகுதிக்குழு உறுப்பினர் கே.கே.புஷ்பா வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் எச்.சதீஷ் நன்றி கூறினார். முன்னதாக டோல்கேட்டில் இருந்து தோழர் சி.குரு பாதம் நினைவுச் சுடரை வி.அம்சாபாய் எடுத்துக் கொடுக்க ஜி.கணேஷ் பெற்றுக் கொண்டு மாநாட்டு அரங்கில் வழங்க ஜெ.அன்பு பெற்றுக் கொண்டார். எண்ணூர் பவுண்ட்ரீஸ் ஆலையில் இருந்து தோழர் எஸ்.பரமசிவம் நினைவுச் சுடரை ஏ.சிவசங்கரன் எடுத்துக் கொடுக்க ஆர்.ஸ்டாலின் பெற்றுக் கொண்டு மாநாட்டு அரங்கில் வழங்க கே.வெங்கட்டையா பெற்றுக் கொண்டார் தீர்மானங்கள் சொத்து வரி, தொழில் வரி கட்டண உயர்வுகள் குறித்த மாநகராட்சி தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும், திரு வொற்றியூரில் வார்டுக்கு ஒரு விளையாட்டு திடல் அமைக்க வேண்டும், அஜெக்ஸ் சுரங்கப்பாதையை விரைந்து சீரமைக்க வேண்டும், அம்பேத்கர் நகரில் பூங்கா அமைக்க வேண்டும், மெட்ரோ ரயிலை எண்ணூர் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும், விஷவாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் தொழிற்சாலை மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் . காண்கார் பகுதி யில் சுடுகாடு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர்கள் தேர்வு திருவொற்றியூர் - எண்ணூர் பகுதிக்குழு திரு வொற்றியூர் வடக்கு, திருவொற்றியூர் தெற்கு என இரண்டு பகுதிக் குழுக்ககளாக பிரிக்கப்பட்டு, 13 பேர் கொண்ட வடக்கு பகுதிக்குழு செயலாளராக எஸ்.கதிர்வேல், 11 பேர் கொண்ட தெற்கு பகுதிக்குழு செயலாள ராக ஆர்.கருணாநிதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.