சென்னை, ஆக.1- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் உலக தாய்ப்பால் ஊக்குவிப்பு விழிப்புணர்வு வாரத்தை மாநகராட்சி மேயர் பிரியா துவக்கி வைத்தார். பச்சிளங் குழந்தை களுக்கு பிறந்து அரை மணி நேரத்திற்குள் தொடங்கி குறைந்தது ஆறு மாதம் வரையில் தாய்ப்பால் ஊட்டப்படவேண்டியதன் அவசியம் குறித்து மேயர் பிரியா தலைமையில் எடுத்துரைக்கப்பட்டது. தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, அறிவாற்றல் அதிகரிப்பதோடு பிற்காலங் களில் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் வராமலும் நன்மையளிக் கிறது. மேலும் தாய்மார் களுக்கு கர்ப்பப்பை சுருங்கி ரத்தப்போக்கு குறைவ தோடு, மார்பகம் மற்றும் சினைப்பை புற்றுநோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இந்நிகழ்ச்சி யில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் விழிப்புணர்வு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். தாய்ப்பால் குழந்தை களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், 3 குழந்தைகளில் 2 குழந்தை களுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் கூட தாய்ப்பால் கொடுக்கப்படு வதில்லை என ஆய்வு தெரி விக்கிறது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி, துணை முதல்வர் டாக்டர் ஜென்னட் சுகந்தா, மருத்து வக் கண்காணிப்பாளர் டாக்டர் பி.மகேஷ், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா மலர், சமூக குழந்தைகள் நிலையத் துறை இயக்குநர் கணேஷ், பேராசிரியர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.