திருவிக நகரில் மாதர் சங்கம் சமத்துவ பொங்கல் விழா
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவிக நகர் நம்மாழ்வார் பேட்டை கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா.தேவி, பகுதிச் செயலாளர் ராஜலக்ஷ்மி, மாவட்ட பொருளாளர் பூங்குழலி, நிர்வாகிகள் மாரியம்மா, சவுந்தரி, தனலட்சுமி, ஷீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் சிலைக்கு சிபிஎம் மரியாதை
பொங்கலன்று (ஜன.15) நுங்கம்பாக்கம் புஷ்பாநகர் திருவள்ளுவர் குடியிருப்பில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வே.இரவீந்திரபாரதி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
கொளத்தூரில் மாதர் சங்கம் சமத்துவ பொங்கல் விழா
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கொளத்தூர் சிவசக்தி நகர், மகாத்மா காந்தி நகர் கிளைகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் பூங்குழலி, நிர்வாகிகள் பா.ஹேமாவதி, பச்சையம்மாள், முருகக்கனி, ராணி, விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மணலியில் மாதர் சங்கம் சமத்துவ பொங்கல் விழா
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணலியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிபிஎம் பகுதிச் செயலாளர் டி.பாபு, நிர்வாகிகள் ஜெ.ரவிச்சந்திரன், எஸ்.நீலவேணி, ஜி.சுமதி, கே.மோகன் குமார்., மாதர் சங்க நிர்வாகிகள் சி.உஷா, சடையம்மாள், அழகேஸ்வரி, ஆனந்தி, சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சைதாப்பேட்டையில் மாதர் சங்கம் சமத்துவ பொங்கல் விழா
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சைதாப்பேட்டை பகுதி, பி.எஸ் நகர் கிளையின் சார்பில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.சித்ரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அண்ணாநகரில் அனைத்து மத சமத்துவ பொங்கல் விழா
சிபிஎம் கட்சியின் அண்ணாநகர் பகுதி சார்பில், டி.பி. சத்திரத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.