புதுச்சேரி, செப். 25- சட்டப்பேரவையில் அறிவித்த படி நியாய விலைக் கடைகளை திறக்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனி யம்மாள் தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் இளவரசி, நிர்வாகிகள் சத்தியா, உமா சாந்தி, மாரிமுத்து, தாட்சாயினி, பரிமளா, பிரியா, ஜானகி, சிவசங்கரி, கோமதி, மாலதி, சந்திரவதனி, மலர் விழி உட்பட பலரும் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக மூடப் பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க வேண்டும். வீதி யெங்கும் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் ரெஸ்ட்ரோ பார்களை மூட வேண்டும். அரசு அறிவித்தப்படி குடும்பத் தலைவிக்கு ரூ. 1000 உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாட்களுக்கும் முழுமை யாக வேலை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தினர். முன்னதாக நேரு வீதி மிஷின் வீதி சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வ லத்தில் அரிசி, பருப்பு, சமையல் பொருட்களை சிறிய பைகளில் கட்டி மாலையாக தொடுத்து வந்தனர்.