districts

img

காஞ்சிபுரத்தில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

காஞ்சிபுரம், நவ.5 - காஞ்சிபுரம் பச்சை யப்பன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான கராத்தே தற்காப்பு பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சியின் பொழுது கல்லூரி மாணவி கள் தலையில் ஓடு உடைத்தும், செங்கல் உடைத்தும் பயிற்சியில் மேற்கொண்டனர். காஞ்சிபுரம் பச்சை யப்பன் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பெண்களின் பாதுகாப்புக்கு தற்காப்பு கராத்தே பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் கோமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் இஷின்ரியூ கராத்தே பயிற்சி பள்ளி பயிற்சி யாளர் நூர் முகமது மற்றும் அவரது குழுவினர் தற்காப்பு கலைகள் குறித்து  செயல்விளக்கம் அளித்த னர். பயிற்சியில் கல்லூரி மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தற்காப்பு கலைகள் குறித்து அறிந்தது டன், செய்முறைப் பயிற்சி யிலும் ஈடுபட்டனர்.