districts

img

இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 பேருக்கு மணிமண்டபம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் ஜானகிபுரம் அருகில் மறைந்த தலைவர் ஆ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.