districts

img

கிளியனூரை தனி ஒன்றியமாக்குக!

விழுப்புரம்,அக்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்ட 24 வது மாநாடு திருச்சிற்றம்பலம் கூட்டுப்பாதையில் தோழர் என்.சங்கரய்யா நினைவரங்கத்தில் நடைபெற்றது. ஐ.சேகர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் ஆர்.சேகர் கொடியேற்றி வைத்தார். வி.சுந்தரமூர்த்தி வரவேற்றார். கே.மாயவன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார் தொடங்கி வைத்தார். வட்ட செயலாளர் எம்.கே.முருகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.அர்ஜுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வானூர் ஒன்றியத்தை ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்தபடி இரண்டாகப் பிரித்து கிளியனூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் அறிவிக்க வேண்டும், வானூர் அரசு பொது மருத்துவமனையை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், திருச்சிற்றம்பலம் கூட்டுப் பாதையில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும், கோட்டகுப்பம் நகரத்தில் துணை மின்நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன் மாநாட்டை முடித்து வைத்து நிறைவுறையாற்றினார்.  வட்டக்குழு தேர்வு 13 பேர் கொண்ட வட்டக்குழுவின் செயலாளராக எஸ்.பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டார்.