டாக்டர்.அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் சார்பில் நடைபெறும் நாடு தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வேலூர் மண்டிவீதியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, சிபிஐ மாவட்ட செயலாளர் ஜி.லதா, ஏழுமலை சிபிஐ(எம்எல்) ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், எஸ்.தயாநிதி (சிபிஎம்), எல்.மணி(சிபிஐ), வேலூர் பிலிப் (விசிக), ஜி.கோபி(மதிமுக), சிவகுமார் (திராவிடர் கழகம்), சித்திக் அகமத் (மனிதநேய மக்கள் கட்சி), ஜி.எஸ்.இக்பால்(திமுமுக), வினோத்கன்னா (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.