districts

img

தோழர் வில்சன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை, மே 29- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாதவரம் - செங்குன்றம் பகுதிக் குழுவிற்கு உட்பட்ட விநாயகபுரம் 32ஆவது வட்ட ‘சி’ கிளை செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் (எ) எம்.வில்சன் (58) திங்களன்று (மே 29) காலமானார். அவரது உடலுக்கு வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் சி.கல்யாணசுந்தரம், மாத வரம் செங்குன்றம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், பகுதிக்குழு உறுப்பினர்கள் டி.சாரதி, ஆர்.தாமோதரன், ஏ.தமிழ்செல்வி, வி.சர வணன், கே.சி.ஏ.கருத் திருமன் உள்ளிட்ட பலர் மலர்  வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் செவ்வாயன்று (மே 30)  மாலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.