ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களை கைவிட கோரி திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகி எஸ். அபிராமன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.