districts

img

காட்பாடியில் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை

வேலூர், பிப் 28 - ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட வரைவு திட்டத்தை ரத்து செய்ய  வேண்டும். தமிழ்நாடு பார் கவுன்சில் என உள்ளதை மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கையையும் மொழி ஆதிக்க திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காட்பாடி நீதிமன்றம் முன்பு காட்பாடி வழக்கறிஞர் சங்கம் சார்பில் 30க்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் காட்பாடி நீதிமன்ற வாயில் முன்பு ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.