செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அதிக அளவில் ரத்ததானம் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழகத்திற்கு பாராட்டு சான்றிதழை மருத்துவமனையின் முதல்வர் ஜி.ஆர்.ராஜஸ்ரீ வழங்கினார். சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மு.பிரியங்கா மாவட்டச் செயலாளர் க.ஜீவானந்தம் ஆகியோர் அதனை பெற்றுக்கொண்டனர்.