கள்ளக்குறிச்சி, ஆக.29- கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளின் மேம் பாட்டிற்கான கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்துகள்,ஒட்டுண்ணி நீக்க மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதன் ஒரு பகுதி யாக, கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்கு தலா ரூ. 16 லட்சம் மதிப்பிலான 6 நட மாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தொடங்கி வைத்தார். உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார். திருக்கோவிலூர், ரிஷி வந்தியம், கல்வராயன் மலை, சின்னசேலம், திரு நாவலூர், உளுந்தூர் பேட்டை ஆகிய 6 கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட தொலைதூர கிராமங்க ளுக்கு முன்னுரிமை அளித்து கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள இந்த நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2 கிராமங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவார்கள்.