சென்னை, நவ. 24- மணலியில் உள்ள சி.பி.சி.எல். நிறுவன த்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு உபகர ணங்கள் .வழங்கும் நிகழ்ச்சி மணலியில் உள்ள பாலிடெக்னிக் வளாகத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எச்.சங்கர் தலைமை தாங்கினார். இயக்குநர் (நிதி) ரோகித் குமார் முன்னிலை வகித்தார். இதில் வடசென்னை மக்களவை உறுப்பி னர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு 112 ஊன்றுகோள்கள், 78 காது கேட்கும் கருவிகள், 75 தானியங்கி மூன்று சக்கர வாகனம், 54 செயற்கை கால்கள், 46 தானியங்கி நாற்காலி மற்றும் சிலருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் என மொத்தம் 230 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங் களை வழங்கினர். உபகரணங்களின் மொத்த மதிப்பு ரூ.66 லட்சம் ஆகும். பின்னர் கலாநிதி வீராசாமி பேசுகையில், 230 மாற்றுத் திறனாளிகளை ஓராண்டுக்கு முன்பே தேர்வு செய்து அவர்களின் தேவைக்கு ஏற்ப அலிம்கோ நிறுவனம் மூலம் சிறப்பு உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மக்கள் நலன் சார்ந்த திட்ட ங்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் தொடர்ந்து உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் சிபிசிஎல் நிறுவன பொது மேலா ளர்கள் பிரேம்சந்த், புருஷோத்தமன், மணலி மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறு முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.