districts

சென்னை முக்கிய செய்திகள்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய  மனிதர்களை பயன்படுத்தினால் சிறை  

 திருவேற்காடு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
 

அம்பத்தூர், செப். 13-  கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் சிறை உறுதி என திருவேற்காடு நகராட்சி ஆணை யர் ஜஹாங்கீர் பாஷா எச்சரித்துள்ளார். இதுகுறித்து ஆணையர்  கூறுகையில், திருவேற்காடு நகராட்சி பகுதியில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நகராட்சி வாகனம் அல்லது  நகராட்சியில் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த  சேவையை பெற 14420 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறு வாழ்வு சட்டம் 2013 விதிகள் 7இன் படி, எக்காரணம் கொண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதர்களை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்தக் கூடாது. இதை மீறினால் 2  ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இரண்டாவது முறையும் தவறு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். மேலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தொழிலாளருக்கு உயிரி ழப்பு ஏற்பட்டால், அந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு தொடர்புடைய உரிமை யாளர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. எனவே பொது மக்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

சென்னையில் டபுள் டக்கர் மெட்ரோ
 

சென்னை, செப். 13- சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத் தும் போக்குவரத்துகளில் மெட்ரோவும் இணைந்துள்ளது. சென்னையில் 2015ஆம் ஆண்டு முதல் மெட்ரோ சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. முதலில் மக்கள் அதிகளவில் பயன் படுத்தவில்லை என்றாலும் நாளுக்கு நாள் மக்கள் பயன்பாடு அதிகரித்து கொண்டே சென்றது. தற்போது பேருந்து மற்றும் மின்சார ரயில் சேவைக்கு அடுத்தபடியாக மெட்ரோ உள்ளது. கடந்த மாதம் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த மெட்ரோ சேவையை பயன்படுத்தி உள்ளனர். மக்கள் வரவேற்பை தொடர்ந்து இதர மாவட்டங்களிலும் மெட்ரோ சேவை நிறுவ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிடப்பட்டது. அதன்படி கோவை, மதுரை, திருச்சி,  நெல்லை, சேலம் போன்ற மாவட்டங்க ளில் விரைவில் மெட்ரோ பணிகள் தொடங் கும் என தெரிகிறது. இதற்கான அறிக்கைகள்  அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசிடம் இருந்து அதற்கான  அனுமதி வழங்கப்படும் என எதிர்ப்பார்க் கப்படுகிறது. மேலும் சென்னையில் மெட்ரோ நிறுவனம் சார்பில் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதால் மக்கள் மெட்ரோ சேவையை அதிகளவில் பயன்படுத்த முன்வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மெட்ரோ சேவை பல்வேறு கட்டங்களாக விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ சேவை டபுள் டக்கர் வடிவில் 2 பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. சென்னை ஆற்காடு  சாலையில் டபுள் டக்கர் மெட்ரோபாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த டபுள் டக்கர்  மெட்ரோ பாலம் விரைவில் கட்டி முடிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

புழல் சிறையில் கைதிகள் மோதல் 
சென்னை, செப்.13- சென்னை புழல்  மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள்  அடைக்கப்பட்டு உள்ளனர்.  இதில் கடந்த 9 மாதத்துக்கு முன்பு அடிதடி  வழக்கில் புரசைவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட இம்மானுவேல் (வயது 21) என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் சிறையின் வெளியே அமர்ந்திருந்த போது அங்கு ஏற்கனவே விசாரணை சிறையில் இருந்த ஓட்டேரியை சேர்ந்த சூர்யா (23) மற்றும் புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த நித்தின்குமார் (23) ஆகியோர் வந்து திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின்னர் இது மோதலாக மாறியது. கைதிகள் ஒரு வரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால்  சிறைவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  சிறைக்காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தாக்குதலில் கைதிகளுக்கு காயம் ஏற்பட்டது.அவர்க ளுக்கு சிறை மருத்துவர்கள் சிசிச்சை அளித்த னர். கஞ்சா விற்பனை தொடர்பாக இம்மானு  வேலுடம் மற்ற இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து புழல் காவல்நிலையத்தினர் வழக்கு  பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதற்கிடையே  சிறையின் வெளிப்புற காம்பவுண்ட் சுவர் அருகில் வெளியில் இருந்து வீசப்பட்ட பார்சலை சிறை காவலர் கள் கண்டெடுத்தனர். அதனை பிரித்து பார்த்த போது 3 செல்போன்கள் இருந்தது. அதனை  சிறைக்குள் வீசியது யார்? எந்த கைதிக்கு  கொடுக்க வீசப்பட்டது என்பது குறித்து சிறை  அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

பெண்களை  மிரட்டி  நகைகள் கொள்ளை 
அண்ணாநகர், செப்.13-  சென்னை, அண்ணாநகர், வி பிளாக், 4-வது அவென்யூவில் வசித்து வருபவர் சுசித்ரா வயது76). இவரது கணவர் ஏற்கனவே  இறந்து விட்டார்.  இவர்களது மகன் அமெரிக்காவில் பொறி யாளராக  வேலைபார்த்து வருகிறார். இதைய டுத்து சுசித்ரா மட்டும் வீட்டில் தனியாக வசித்தார். அவருக்கு உதவியாக சிவகா சியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வீட்டு  வேலைகள் செய்து அவருடனேயே தங்கி  உள்ளார். செவ்வாயன்று  இரவு சுசித்ராவும்,  மகாலட்சுமியும் வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்கினர். அதிகாலை 3 மணியள வில் 2 வாலிபர்கள் கத்தியுடன் வீட்டுக்குள்  புகுந்தனர். அவர்கள் அறையில் தூங்கிக் கொண்டு இருந்த மூதாட்டி சுசித்ரா, மற்றும் வேலைக்கார பெண் மகாலட்சுமியை கத்திமுனையில் மிரட்டினர். அலறினால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி  அமர வைத்தனர். இதனால் என்ன செய்வது  என்று தெரியாமல் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.  இதைத்தொடர்ந்து மர்மநபர்கள் 2 பேரும் பீரோவை உடைத்து அதில் இருந்த  ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும்  நகைகளை கொள்ளையடித்தனர். மேலும்  மூதாட்டி சுசித்ரா, வேலைக்கார பெண்  மகாலட்சுமி அணிந்து இருந்த நகைகள்  மற்றும் விலை உயர்ந்த 2 செல்போன்களை யும் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து மூதாட்டி சுசித்ரா காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அண்ணா நகர் காவல்நிலைய ஆய்வாளர் கோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசா ரணை நடத்தினர். கொள்ளையர்கள் உருவம்  அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா வில் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அனகாபுத்தூர் பகுதிக்கு 
கூடுதல் குடிநீர் 

தாம்பரம்,செப்.13-  தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் தற்போது குடியிருப்புகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளது.  பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீர் சப்ளை  செய்ய முடியாமல் இருந்தது. இதனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே அப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. அப்பகுதி மக்கள் கிணற்று நீர் மற்றும் ஆழ்துளை  கிணறு தண்ணீரையே நம்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து அனகாபுத்தூர் பகுதியில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அனகாபுத்தூரில் ரூ.18.88 கோடி செலவில் புதிதாக உயர்நிலை மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது.  இதனை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி. பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் இனி அடுத்த  மாதம் முதல் வாரத்திற்கு 3 முறை தண்ணீர் வழங்க முடியும்.  இதற்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மார்க்கெட் தெரு மற்றும் விநாயகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு மேல்நிலைத் தொட்டிகளையும் ஒரு மாதத்தில் தாம்பரம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பம்மல் மண்டலத்தில் 15 ஆயிரத்து 973 வீடுகளில் வசிக்கும் 60 ஆயிரத்து 697 பேர் பயன் அடைவார்கள். தினமும் 8.19 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் விநியோகம் 3.40 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என்றார்.

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது

சோமங்கலம்,செப்.13-  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (வயது 52), சென்னை  மாநகர அரசு பேருந்து ஓட்டு நராக  வேலை செய்து வருகிறார்.  இவர் திங்கட்கிழமை முன்தினம் சைதாப்பேட்டை யில் இருந்து அமரம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்தை  ஓட்டிச்சென்றார். அமரம் பேடு சென்றடைந்த பின்னர் அங்கு இருந்து மீண்டும் சைதாப்பேட்டைக்கு பேருந்து  புறப்பட்டது. அப்போது குடி போதை யில் பஸ்சில் ஏறிய நபரை  பேருந்து ஓட்டுநர் காட்ரம் பாக்கம் ஜங்ஷன் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.  பின்னர் ஓட்டுநர் பஸ்சில்  இருந்து கீழே இறங்கி அந்த பகுதியில் பாட்டிலில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற போது ஓட்டுநரின் தலையில் பாட்டிலால் சர மாரியாக தாக்கிவிட்டு மர்ம நபர் தப்பிச்சென்று விட்டார். இது குறித்து டிரைவர் குமார் சோமங்கலம் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணிமங்கலம் காவல் உதவி  ஆணையர் ரவி தலைமை யில் சோமங்கலம் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓட்டுநரை தாக்கிய நபர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து. பிரகாஷை போலீசார் கைது செய்தன.

முதலமைச்சர் மீது அவதூறு அதிமுக முன்னாள் அமைச்சர் நேரில் ஆஜராக உத்தரவு

விழுப்புரம்,செப்.13-  விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரே கடந்த 10.3.2023 அன்று அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசு, முதல மைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசிய தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் அக்.9 ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகும்படி யும் உத்தரவிட்டார். செஞ்சி நாட்டார் மங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது அவதூறு வழக்கு தொடரப் பட்ட நிலை யில் தற்போது அவர் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம், செப்.13- விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு வழுதரெட்டி தலித் பகுதி யில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு நகராட்சி சார்பில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றக்கூடிய மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வரவில்லை.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை, நகராட்சி அதிகாரிகளிடம் முறை யிட்டும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செவிலியர் மாணவி தற்கொலை: அமமுக கவுன்சிலர் கைது

விழுப்புரம்,செப்.13- விழுப்புரம் அருகே வளவனூர் செவி லியர் கல்லூரி மாணவி தற்கொலையில் அமமுக கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் அருகே வளவனூர் பகுதி யில் வசித்து வந்த 18 வயது மாணவி, சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் செவிலியர் பயிற்சி மையத்தில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2022-ல், அமமுக நகர செயலாளரும் வளவனூர் பேரூராட்சியின் 11-வது வார்டு கவுன்சிலருமான கந்தன் (40) என்பவருடைய பாத்திரக் கடையில் வேலை செய்தார். அப்போது அவர், அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக பழகி வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், அந்த மாணவியை சென்னை யில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து செவிலியர் படிப்பில் சேர்ந்துள்ளனர்.  ஆனால் கந்தன், அந்த மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 1 ஆம் தேதி மாணவி, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 7 ஆம் தேதி அந்த மாணவி உயிரி ழந்தார் . இதையடுத்து, கந்தனின் உறவினரான வளவனூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர், கந்தன் தூண்டுதலின் பேரில் மாணவியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து அவரது பெற்றோரிடம், கந்தன் மீது காவல்நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்க கூடாது என்று மிரட்டினார். இருப்பினும் மாணவியின் சாவுக்கு காரணமான கந்தனை கைது செய்யக்கோரி அவரது பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த கந்தன், விஷம் குடித்த தாக கூறி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கந்தன், விஜயன் ஆகிய இருவரின் மீதும் வளவனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலை யில் கந்தனுக்கு சிகிச்சை முடிந்து உடல் நலம் சரியாகி விட்டதாக மருத்து வர்கள் கூறியதன் பேரில்  அவரை காவல்துறை யினர் கைது செய்தனர்.

பேச்சு போட்டி: மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

விழுப்புரம்,செப்.13- நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு நடைபெறும் பேச்சுப் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விழுப்பு ரம் ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- தமிழ் வளர்ச்சித் துறை யின் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலை வர்கள் மகாத்மா காந்தி, ஜவ ஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரி யார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலை ஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப் பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாண வர்களுக்கான பேச்சுப் போட்டி செப்.15 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கல்லூரி, பள்ளி மாண வர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000-மும், இரண்டாம் பரிசு ரூ.3000- மூன்றாம் பரிசு ரூ.2000-மும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

செவிலியர் மாணவி தற்கொலை: அமமுக கவுன்சிலர் கைது

விழுப்புரம்,செப்.13- விழுப்புரம் அருகே வளவனூர் செவி லியர் கல்லூரி மாணவி தற்கொலையில் அமமுக கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் அருகே வளவனூர் பகுதி யில் வசித்து வந்த 18 வயது மாணவி, சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் செவிலியர் பயிற்சி மையத்தில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2022-ல், அமமுக நகர செயலாளரும் வளவனூர் பேரூராட்சியின் 11-வது வார்டு கவுன்சிலருமான கந்தன் (40) என்பவருடைய பாத்திரக் கடையில் வேலை செய்தார். அப்போது அவர், அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தவறாக பழகி வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர், அந்த மாணவியை சென்னை யில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து செவிலியர் படிப்பில் சேர்ந்துள்ளனர்.  ஆனால் கந்தன், அந்த மாணவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 1 ஆம் தேதி மாணவி, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 7 ஆம் தேதி அந்த மாணவி உயிரி ழந்தார் . இதையடுத்து, கந்தனின் உறவினரான வளவனூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர், கந்தன் தூண்டுதலின் பேரில் மாணவியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து அவரது பெற்றோரிடம், கந்தன் மீது காவல்நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்க கூடாது என்று மிரட்டினார். இருப்பினும் மாணவியின் சாவுக்கு காரணமான கந்தனை கைது செய்யக்கோரி அவரது பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த கந்தன், விஷம் குடித்த தாக கூறி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கந்தன், விஜயன் ஆகிய இருவரின் மீதும் வளவனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலை யில் கந்தனுக்கு சிகிச்சை முடிந்து உடல் நலம் சரியாகி விட்டதாக மருத்து வர்கள் கூறியதன் பேரில்  அவரை காவல்துறை யினர் கைது செய்தனர்.