திருவண்ணாமலை,ஆக.16-
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் வீடு இல்லாத சிறு பான்மை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலி யுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
வந்தவாசி வட்டம், காரம் மதுரா மாலையிட்டான் குப்பத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபாகரன் தலைமையில் காரம்கிராமத்தில் நடைபெற்றது.
அதில், ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் தற்போது வசித்து வரும் குடிசைகள் தீ விபத்தில் எரிந்து போனதால், அரசுக்கு சொந்தமான தரிசு புறம்போக்கு நிலத்தில் உடனடியாக வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.