districts

img

இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வர வாய்ப்பு!

சென்னை, பிப். 3- ஐஐடி மெட்ராஸ், புற்றுநோய் ஆரா ய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலா வது புற்றுநோய் மரபணு தரவு தளத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் மிக ஆபத்தான உடல் நலப் பிரச்சனைகளில் ஒன்று புற்று நோய். இந்த கொடிய நோயுடன் வாழும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்று நோய் வர வாய்ப்புள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி 14,61,427 பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவ தாகவும் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் தெரிவித்துள்ளது. 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு 12.8 விழுக்காடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் உள்ள போதும், உலக ளாவிய மரபணு ஆய்வுகளோடு ஒப்பிடு கையில், இந்தியாவில் குறைவாக இருப்பதாகவே மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் பரவலாக உள்ள புற்று நோய்களுக்கு என மரபணு கட்டமைப்பு இல்லாத காரணத்தால், இந்தியாவில் புற்றுநோயின் குறிப்பிட்ட திரிபுகளை கண்டறியக்கூடிய நோய் கண்டறியும் சாதனங்களோ, மருந்து வகைகளோ பட்டியலிடப்படவில்லை. இந்தியாவில் பல்வேறு புற்று நோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்து வரும் இடைவெளியை நிரப்பும் வகை யில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020ஆம் ஆண்டில் ஐஐடி மெட்ராஸ் தொடங்கியது. இந்த திட்டத் தின்கீழ் நாடு முழுவதும் 480 மார்பகப் புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரி களில் இருந்து 960 முழு எக்சோம் வரிசை முறை சேகரிக்கும் பணி நிறைவு பெற்று ள்ளது. மும்பையில் உள்ள கார்கினோஸ் ஹெல்த்கேர், சென்னை புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிவாரண அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ் இந்திய மார்பகப் புற்றுநோய் மாதிரிகளில் இருந்து மரபணு திரிபுகளின் பெயர் குறிப்பிடப்படாத சுருக்கத்தை சேகரித் தது. உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4ஆம் தேதி கடைபிடிக்கப்படும் நிலை யில், இந்தப் பணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய மார்பகப் புற்று நோய் மரபணு வரிசை உருவாக்கம் நிறைவடைந்ததாக அறிவித்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரி யர் வி.காமகோடி, பாரத் புற்றுநோய் மரபணு வரைபடத்தை  இந்த கல்வி நிறுவன வளாகத்தில் திங்களன்று (பிப்.3) வெளியிட்டார். இந்தியாவிலும், வெளிநாடுகளி லும் உள்ள ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் வெளிப்படையாக அணுகக்கூடிய வகையில் இந்தியா விலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், bcga.iitm.ac.in என்ற தரவுத்தளத்தை  இக்கல்வி நிறுவனம் ஏற்படுத்தி யுள்ளது. இந்த வரைபடம் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆரா ய்ச்சியாளர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை எடுத்து ரைத்தார் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி. மேலும் அவர் கூறுகையில், அனை வருக்கும் ஐஐடிஎம் என்ற சமூகத் திற்கான உறுதிப்பாட்டில் உண்மை யாக உள்ள நாங்கள், மூளைத் தரவு களைத் தொடர்ந்து இந்த கல்வி யாண்டில் இரண்டாவதாக புற்றுநோய் மரபணு தரவுகளை வெளியிடுகி றோம். இதனால் ஆரம்ப கட்டத் திலேயே நோயைக் கண்டறிதல், நோய் முன்னேற்றம், சிகிச்சை விளைவு களால் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை அறிந்துகொள்ள முடியும்” எனக் குறிப் பிட்டார். குறைந்த செலவில் புற்றுநோயைக் குணப்படுத்தும் இடைநிலை ஆராய்ச்சி  மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத் துவதற்காக ஐஐடி மெட்ராஸ் மற்றும் கார்கினோஸ் ஹெல்த்கேர் இணைந்து, புற்றுநோய்க்கான தேசிய துல்லிய மருத்துவ மையத்தின் கீழ் இந்த பகுப் பாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஐஐடி மெட்ராசில் உள்ள புற்றுநோய் திசு உயிரி வங்கி ஆய்வுக்கூடத்துக்கு இந்திய அரசின் அறிவியல்- தொழில் நுட்ப அமைச்சகத்தின் அறிவியல்- தொழில்நுட்பத் துறை அளித்துவரும் ஆதரவை இக்கல்வி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.