districts

img

வேலூரில் ஆட்டோ சங்க கிளை துவக்கம்

வேலூர், ஜன.1- வேலூர் மாநகரம் கஸ்பா ஆர்.என்.பாளையத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க (சிஐடியு) கிளை துவக்கவிழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.  கிளைத் தலைவர் ஆர்.ஜாபர்கான் தலைமை தாங்கினார். செயலாளர் ஐ.ஷாஹின்ஷா வரவேற்றார். கவுரவத் தலைவர் என்.சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ஆர்.சங்கர், துணைச் செயலாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க கொடியை சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் ஏற்றி வைத்தார்.  சிஐடியு மாவட்ட துணை செயலாளர் வி.நாகேந்திரன் பெயர் பலகை திறந்து வைத்தார்.  ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.முரளி, சட்ட ஆலோசகர் எஸ்.பாபு அனைவருக்கும் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சி.எஸ்.மகாலிங்கம், ஜெகன், மஞ்சுநாத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக கிளை பொருளாளர் முகமது ஷபி நன்றி கூறினார்.