எஸ்.ஆர்.எம் காலேஜ் ஆப் ஆக்குபேஷனல் தெரபி சார்பில் ஆட்டிசம் குறித்த 3 நாள் தேசிய மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. அகில இந்திய தொழில்சார் சிகிச்சையாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பங்கஜ் பாஜ்பாய், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் டாக்டர் நிதின் எம்.நகர்கர் முன்னிலையில், மாநாடு மலரின் முதல் பிரதியை டாக்டர் பா.சத்தியநாராயணன், இணை வேந்தர் பெற்றுக்கொண்டார். துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் டாக்டர் எஸ்.பொன்னுசாமி, கூடுதல் பதிவாளர் டாக்டர் டி.மைதிலி, மற்றும் டாக்டர் யு.கணபதி சங்கர், எஸ்.ஆர்.எம் தொழில் சிகிச்சை, மருத்துவ கண்காணிப்பாளர் ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.