districts

img

டி.பி.ஜெயின் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் கல்லூரி கல்வி இயக்குநரிடம் மாணவர்கள் மனு

சென்னை, ஜூலை 22 - டி.பி.ஜெயின் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை நடத்த  வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூலை 22) கல்லூரி கல்வி இயக்குநரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளிததனர். சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் டி.பி.ஜெயின் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதே கல்லூரியில் சுயநிதி பாடப்பிரிவுகளும் உள்ளது. இந்த கல்லூரி நிர்வாகம் உதவி  பெறும் பாடப்பிரிவில் கடந்த 3  ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையை  நடத்தாமல் உள்ளது. அதேசமயம் சுயநிதி பாடப்பிரிவில் அதிக கட்ட ணத்தில் மாணவர் சேர்க்கையைநடத்தி வருகிறது.   எனவே, முறைகேடாக செயல்படும் கல்லூரியை அரசு கையகப்படுத்த கோரி இந்திய மாணவர் சங்கம் தொடர் இயக்கம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பாரதி (தென் சென்னை), மிருதுளா, விக்னேஷ்வரன் (மத்தியசென்னை), காவியா, நித்திஷ் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். இதன்பின்னர் இயக்கு நர் ஈஸ்வரமூர்த்தியை சந்தித்து சங்கத்தின் மனு அளித்து பேசினர்.