வேலூர், ஜூலை 1-
வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி உலக சாதனைக்காக 1 மணி நேரத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டது. அதன்படி கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் காட்டுபுத்தூர் ஊராட்சியில் நடந்த விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலாகோபி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
அதேபோல் ஊசூர் அடுத்த தெள்ளூர் ஊராட்சியில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் தலைமை தாங்கினார். ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.