districts

img

சாதிச்சான்று இல்லாத இருளர் இன மக்கள்

ஆம்பூர், நவ.12 - திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட  கே.கே நகர் பகுதியில் சுமார் 50 ஆண்டு களுக்கும் மேலாக 15க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள்  வசிக்கின்றன. இவர்கள் மலையடிவாரத்தில்  எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் குடிசை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதுவரை மின்சார வசதி கூட செய்து கொடுக்கப்படவில்லை. இதனால்  பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் கடித்து விடுமோ என்ற அச்சத்துடனே வாழும் சூழ்நிலை. இவர்களுக்கு  இருளர் சான்றிதழ் , வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர், மின் இணைப்பு வழங்கக் கோரி அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும்  இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசும், மாவட்ட நிர்வாக மும் உடனடியாக தலையிட்டு தங்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இருளர் இன சான்றிதழ் வழங்க வேண்டும், சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.