திருவள்ளூர், டிச.30- வல்லூர் அனல் மின் நிலைய வருகை யால், மழை நீராலும், சாம்பல் வெளியேற்றத் தால் பாதிக்கப்பட்ட, அத்திப்பட்டு மற்றும் குருவி மேடு ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகில் உள்ள அத்திப்பட்டில் 700 கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதே போல கொண்டக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட குருவி மேடு பகுதியில் 60 கும் மேற்பட்ட வீடு கள் அமைத்து நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். எந்த பாதிப்புகள் ஏதுமின்றி வாழ்ந்து வந்த நிலையில், அந்த பகுதியில் வல்லூர் அனல் மின் நிலையம் வந்த பிறகு குடியிருப்பு கள் மத்தியில் மழைநீர் தேங்கி அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டு வருவது தொடர் நிகழ்வாக உள்ளது. மேலும் வல்லூர் அனல் மின் நிலையம் வெளியேறும் சாம்ப லால் இம் மக்கள் கடுமையாக பாதிப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த பகுதி வீடுகள் அனைத்தும் மழைக்காலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. அனைத்து பொருட்களும் சேதமடைவது வாடிக்கையாக உள்ளது. இந்த பாதிப்புகளி லிருந்து இன்னும் மக்கள் முழுமையாக விடுபடவில்லை. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வல்லூர் அனல் மின் நிர்வாகம் வீடுகளை கட்டிக் கொடுப்பதுடன், உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு வெள்ளியன்று (டிச 29), சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வல்லூர் அனல் மின் நிலைய சிஐடியு நிர்வாகிகள், கிராம மக்கள், தொழிலாளர் கள் கலந்து கொண்டனர்.