சென்னை, மே 10- சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள் ளது. வீடுகளை அகற்றுவதை எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள் மீதான விசா ரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் செவ்வாயன்று (மே 10) நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ், வீடுகளை இழந்தவர்களுக்கு முதல்வர் மாற்று இடம் வழங்குவதாக கூறியுள்ளார், ஆனால் அந்த இடம் தற்போது வசித்து வரும் பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ள தால், இந்த மக்களின் அன் றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். நீதிபதிகள் உத்தரவு இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு களை அகற்றும் விவகாரத் தில் 2011ஆம் ஆண்டு முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். நாங்கள் மாநில அரசின் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அரசின் வேலை, அதை அவர்கள் செய்யட்டும், ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் நாங்கள் தடை விதிக்க போவதில்லை.
சம்பந்தப்பட்ட நபர்கள் காலி செய்வதற்கு குறிப் பிட்ட காலம் அவகாசம் வழங்கி இருந்தால் அதை அவர்கள் கடைபிடிக்க வேண்டும். அப்போது குறுக் கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் இதுவரை வழங்கப்பட வில்லை என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நோட்டீசை பெற்றுக் கொள்ளுங்கள். வேண்டு மெனில் நாங்கள் தற்காலிகமாக மாற்று இடம் வழங்க மாநில அரசை அறிவுறுத்துகிறோம். ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக எங்கள் உத்த ரவை மாநில அரசு அமல் படுத்த வேண்டும். அதே வேளையில், வீடுகளை இழந்தவர்களுக்கு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும் பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வீடு வழங்கலாம் என்றும் அது வரை தற்காலிக இடத்தில் அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்தி தர உத்தரவிட்டனர். ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வில்லை என்று தொடரப் பட்ட அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் ஆக்கிர மிப்பு அகற்றம், மாற்று இடம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.