ராணிப்பேட்டை, டிச. 29 – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை கிளைத் தலைவர் தா. ரஜினி தலைமையில் ஞாயிறன்று (டிச. 29) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் புத்தக விற்பனை முகாம் நடைபெற்றது. இதில் வாலாஜா தலைமை அரசு மருத்துவர் ஜி. கிரிதரன், ராணிப்பேட்டை கட்டுமான தொழிலாளர் சங்கம் பொதுச்செயலாளர் த. ஞானமுருகன், ஆரம்பப்பள்ளி கூட்டணி மாவட்டச் செயலாளர் செ. சரவணன், உயர்நிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பி.ஆதவன், எம். சதீஷ்குமார் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கபட்டது. ரூ. 12 ஆயிரம் மொத்த விற்பனை செய்யப்பட்டது. சாரல் கலைக்குழு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கிளை செயலாளர் க. கோபால்ராஜ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். உடன் தமுஎகச மாவட்ட தலைவர் அந்திக்காற்று பாலு, மாவட்ட செயலாளர் லோ. ரஜினிகாந்த், மாவட்டப் பொருளாளர் ஆர்.மணிகண்டன், தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, வாலிபர் சங்க பொறுப்பாளர் ஆ.கலைவாணன், லிக்காய் கோட்ட செயலாளர் தா. வெங்கடேசன், சிஐடியு மாவட்ட பொருளாளர் என். ரமேஷ் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். இறுதியாக வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ. ஜெயந்தி நன்றி கூறி முடித்து வைத்தார்.