districts

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் அடித்தளத்தை உருவாக்கிய ஓர் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பாளி

       தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமாக இருந்து கட்சிக் கிளை களையும் வர்க்க- வெகுமக்கள் அமைப்புகளையும்  கட்டி  வளர்த்ததில் அரும்பணியாற்றிய பல தோழர்களை  இத்தொடரில் சந்தித்திருக்கிறோம். இப்போது நாம் சந்திக்கவிருப்பது தோழர் திவாகரன் அவர்கள்.

     கேரளத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் மாவிளாய் என்னும் கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் 1943ல் பிறந்தவர் திவாகரன். மாவிளாய் - பெரளச்சேரி ஆகிய இரண்டு பகுதி கள் இணைந்த இவ்வூரில்தான். மகத்தான தலை வர் ஏ.கே. கோபாலன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப நிலைமை காரணமாக பெற்றோரால் இவரை 5 ஆம் வகுப்பிற்கு மேல்  படிக்க வைக்க முடியவில்லை. தனது சிறு வய திலேயே  தினேஷ் பீடி நிறுவனத்தில் பீடி சுற்றும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் சில ஆண்டுகள் கை நெசவுத் தொழி லிலும் ஈடுபட்டிருக்கிறார்.  

கம்யூனிஸ்ட் குடும்பம் என்பதால்

    1960ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் 45 நாட்களில் வீடு திரும்பிவிட்டார். ஏற்கனவே கண்ணணூர் மாவட்டம் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1963ஆம் ஆண்டு இவர் வேலை தேடி சென் னைக்கு வந்தார். மத்திய பொதுத்துறை நிறு வனமான ஆவடி குளோத்திங் தொழிற்சாலை யில் 1964ல் வேலையில் சேர்ந்தார். இவருடைய குடும்பப் பின்னணி பற்றி விசாரித்த காவல்துறை இவர் ஒரு கம்யூனிஸ்ட்  என்று அறிக்கை அளித்தது. இதனால் 5 மாதங்களுக்கு பிறகு இவர் வேலையிலிருந்து  நீக்கப்பட்டார்.

    சென்னையில் திரைத்துறையில் கேமரா மேன் உதவியாளராக சில ஆண்டுகள் பணி யாற்றினார். சிறார் பருவத்திலேயே தனது கிராமத்தில் பாலர் சங்கத்தில் இணைந்திருந்த திவாகரன் 1964ம் ஆண்டு சென்னையில் தோழர்கள் வி.பி. சிந்தன், கே.எம். ஹரிபட் போன்றோரோடு ஏற்பட்ட தொடர்புக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவே ஆனார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உருவான போது அதில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    அரசியல் ஆர்வம் கொண்ட திவாகரன் 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் வெடித்த  இந்தித் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். காவல்துறையினர் நடத்திய தடி யடியில் காயமடைந்த நிலையில் இவர் பல இளைஞர்களோடு சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மயிலாப்பூர் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலை வர்களில் ஒருவரான கபாலி இவருக்கு உதவி செய்து ஜாமீனில் வெளியே கொண்டுவந்தார். 1966ம் ஆண்டு ஒரு தேநீர் கடையில் வேலை யில் சேர்ந்தார். அந்த வேலையிலும் திருப்தி ஏற் படாத நிலையில் அதே ஆண்டில் ஒரு தையல் கடையைத் துவங்கினார்.

    1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற, நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி  வழிகாட்டலோடு திராவிட முன்னேற்றக் கழக  வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியில் கலந்து கொண்டார். தான் வாழ்ந்த பகுதியில் முரசொலி மாறன் உள்ளிட்ட பல திமுக தலை வர்களுடன் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டதை இப்போதும்  மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார். சிம்சன் நிறுவனத் தொழிலாளியான தோழர் வீரராகவன் சிஐடி நகரில் வசித்துவந்தார். அவரு டன் இணைந்து அப்பகுதியில் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டார் தோழர் திவாகரன்.

    1972ம் ஆண்டு தோழர்கள் பி.ஆர். பரமேஸ்வ ரன், வி.பி. சிந்தன் ஆகியோர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தை சிஐடி நகரில் நடத்துவதில் திவாகரன் முக்கிய பங்காற்றினார். இப்பகுதியில் திவாகரனும், வீரராகவனும் சேர்ந்து எடுத்த முயற்சியால் 17 தோழர்களைக் கொண்ட கட்சிக் கிளை உருவாக்கப்பட்டது. இக்கிளை துவக்கக் கூட்டத்தில் தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் கலந்து கொண்டார். தோழர் திவாகரன் அந்த கிளையின்  செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார்.

   கட்சிக் கிளையை உருவாக்கியதோடு அடுத்த  சில ஆண்டுகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி, முறைசாரா தொழிலாளர் சங்கம், தையல் தொழி லாளர் சங்கம் போன்ற அமைப்புகளை உரு வாக்குவதில் தோழர் திவாகரன் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளை எடுத்திருக்கிறார். தையல் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் மாநிலக்குழு உறுப்பினராகச் செயல்பட் டார். வர்க்க- வெகுமக்கள் அமைப்புகள் மூலமா கத்தான் கட்சி வளர்ச்சியை உருவாக்க முடியும்.  

தலைமறைவுக் காலத்தில்...

      1975ல் அவசர நிலை ஆட்சி பிறப்பிக்கப்பட்டு 1976ல் மாநில திமுக அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பல தலைவர்கள் கைது செய்யப் பட்டார்கள். ஆர்.உமாநாத், வி.பி. சிந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கட்சி முடிவுப்படி தலை மறைவாக செயல்பட்டு வந்தார்கள். அவ்வாறு தலைமறைவாக இயங்கிய தலைவர்களுக்கு உதவிடும் பணியில் திவாகரன் ஈடுபட்டிருக்கிறார். கடுமையான அன்றையச் சூழலில் அவர்களுக்கு உதவியாக இருந்ததைப் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

    அக்காலத்தில் சிஐடி நகர் பகுதியில் கட்சி  அலுவலகம் இல்லை. தொடர்ந்து பல ஆண்டு கள் திவாகரன் நடத்தி வந்த தையல் கடைதான் கட்சி அலுவலகமாகப் பயன்பட்டிருக்கிறது. தோழர்கள் தினமும் இவரது கடைக்கு வருவார் கள், இயக்கங்கள் நடத்துவது பற்றி விவாதிப்பார்கள்.  

    1976ல் சிஐடி நகர் பகுதியில் நியாய விலைக் கடை அமைக்க வேண்டுமென்று கோரி கை யெழுத்து இயக்கமும், பிறகு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டு, அதிகாரிகளைச் சந்தித்து கோரிக் கை வலியுறுத்தப்பட்டது. திவாகரன் உள்ளிட்ட கட்சித் தோழர்கள் அன்று மேற்கொண்ட இந்த முயற்சியினால் அப்பகுதி மக்களுக்கென புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.  

   சிஐடி நகர் பகுதியில் குடிநீர் வசதி சரியாக  இல்லை. முறையாகவும் குடிநீர் கிடைக்க வில்லை. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்திய தன் பலனாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம்  முறைப்படுத்தப்பட்டது. அதில் திவாகரன் முக்கி யப்  பங்கு வகித்ததைத் தோழர்கள் நினைவு கூர்கிறார்கள். உணவு விநியோகம், குடிநீர் வழங்கல் இரண்டையும் தொடர்ந்த சிஐடி நகர் பகுதியில் அறிவுப் பசி தணிப்பதற்காக ஒரு கிளை நூலகம் திறக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து கையெழுத்து இயக்கம் மேற்கொள் ளப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக திவா கரனும், வீரராகவனும் எடுத்த அந்த முயற்சியும் வெற்றி பெற்றது. சிஐடி நகரின் காவாங்கரையில் கிளை நூலகம் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.

     சிஐடி நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கால் கிரவுண்டு இடத்தை சமூக  விரோதிகள் கும்பல்  ஒன்று ஆக்கிரமிக்க முயன்றது. தோழர்கள் வீரராகவனும், திவாகர னும் இணைந்து கட்சி சார்பாக இயக்கம் நடத்தி யதோடு, நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அரசின் சொத்து பாதுகாக்கப்பட்டது.

    1982ம் ஆண்டு தோழர் திவாகரன் கிண்டிக்கு அருகில் உள்ள மடுவாங்கரை பகுதியில் குடியேறினார். அங்கேயும் இயக்கப் பணியைத் தொடர்ந்த இவர் அங்கு குடியிருப்பவர்களைத் திரட்டி மனைப் பட்டாவிற்கான போராட்டத்தை நடத்தினார். பல குடும்பங்களுக்கு மனைப் பட்டா கிடைத்தது.

வீட்டில் நடந்த கூட்டங்கள்

     தன்னுடைய வீட்டிற்கு வி.பி. சிந்தன், கே.எம். ஹரிபட், சி.பி. தாமோதரன், மைதிலி சிவ ராமன் போன்ற தலைவர்கள் வந்ததையும், கட்சிக் கிளை மட்டுமல்லாது இந்துஸ்தான் டெலி பிரிண்டர் தொழிலாளர் சங்கம் உள்ளிட்டு பல அமைப்புகளின் கூட்டங்கள் தனது வீட்டில் நட  ந்ததையும் உற்சாகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்.  

    திவாகரன் பல தோழர்களைக் கட்சிக்குக் கொண்டுவந்திருக்கிறார். டெலிபிரிண்டர் நிறு வனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான பட்டாபி இது பற்றிக் குறிப்பிடுகிறபோது, “திருச்சியில் நடை பெற்ற சிஐடியு மாநில மாநாட்டு பேரணியில் கலந்துகொண்டபோது தோழர் திவாகரனுடன் அறிமுகம் கிடைத்தது. அவருடன் ஏற்பட்ட தோழ மைதான் என்னைக் கட்சிக்குள் கொண்டு வந்தது. கட்சி எனக்குப் புதியது என்பதால் திவா கரன் மூலம் கட்சி பற்றி நிறைய தெரிந்து கொள்ள  வாய்ப்பு கிடைத்தது. அவருடைய கடை தான் தோழர்களின் சந்திப்பு மையமாக இருந்தது.  தேசாபிமானி, தீக்கதிர் பத்திரிகைகள் அவருடைய கடையில் இருக்கும். தேசாபிமானியில் வரும் செய்திகளை எனக்கு விளக்கிப் புரிந்துகொள்ளச் செய்வார்” என்றார்.

    “கட்சிக் கொள்கை சார்ந்த விஷயங்கள் பற்றி எங்களோடு பேசுவார். விவாதிப்பார். சிஐடி நகர் பகுதியில் அவரும் தோழர் வீரராகவனும் நன்கு அறிமுகமானவர்கள். அவரது இணை யரும் இயக்கப் பற்றுள்ளவர்தான். பல இயக்க நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் தங்கள் குழந்தை களுடன் வருவார்கள். சிஐடி நகரில் இருந்து, மடு வாங்கரைக்குச் சென்ற பிறகும் தொடர்ச்சியாக பலருக்கு இலவசமாக தையல் தொழில் பயிற்சி அளித்ததைச் சொல்லியாக வேண்டும்,” என்றும் அவர் பெருமையோடு குறிப்பிட்டார்.”

    சென்னையில் நடைபெற்ற மாநில தையல் தொழிலாளர்கள் மாநாட்டில் சிஐடியு கொடியேற்றி வைத்தது தனக்குக் கிடைத்த ஒரு கவுரமாகக் குறிப்பிடுகிறார் திவாகரன். திவாகரன் - லட்சுமி இணையருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். தோழர் லட்சுமி தொடர்ந்து மாதர் சங்க இயக்கங்களில் பங்களித்து வந்திருக்கிறார். தோழர்கள் திவாகரன், லட்சுமி இருவரும் இப்போதும் கட்சி உறுப்பினர்களாக இருந்துகொண்டு தங்களால் இயன்ற பணியை செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக திவாகரன் தீக்கதிர் வாங்குகிறார், படிக்கிறார்.

   சென்னையின் தியாகராய நகர், சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் கட்சிக் கிளை களை உருவாக்கியதிலும், வர்க்க - வெகுஜன அமைப்புகளை கட்டமைத்ததிலும் தோழர் திவா கரன் முக்கிய பங்காற்றியிருக்கிறார். அக்காலத்தில் திவாகரன் போன்ற தோழர்கள் உருவாக்கிய அடித்தளத்தில் இருந்துதான் இன்று கட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. 80 வயதாகும் தோழர் திவாகரன் இப்போதும் ஒரு முன்னுதாரணத் தோழராக அர்ப்பணிப்போடு ஆற்றி வரும் இயக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.