புதுச்சேரி, அக்.16- புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு (பிளாக் -இ1) தகுதியின் அடிப்படையில் மாவட்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடற்ற 32 பயனாளி களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டப்பேரவை முதல்வர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை களை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் திரு முருகன், சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி, வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் சுந்தரராஜ், உதவி பொறியாளர் சுதர்சன் ஆகியோர் உடனிருந்தனர்.