districts

சென்னை முக்கிய செய்திகள்

கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் குடும்ப அட்டைகள்  ஒப்படைப்பு

செங்கல்பட்டு, நவ.6- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலு காவிற்குட்பட்ட நடுவக்கரை குன்னவாக்கம் கிராமத்தில் சேலம் மைன்ஸ்க்கு சொந்த மான கல்குவாரி 9 ஆண்டு களாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரி அரசு நிர்ணயித்த அளவைவிட சட்டவிரோதமாக அதிக மான கற்களை வெட்டி எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, கிராம பொது மக்கள் ஒன்று சேர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத் தில் வழக்கு தொடுத்தனர். முறைகேடாக செயல்பட்ட கல்குவாரி மீது 7.6 கோடி நஷ்ட ஈடு கட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், சேலம் மைன்ஸ் கல்குவாரி அருகிலேயே சர்வே எண்.170 அரசு புறம் போக்கு மலைப்பகுதி நிலத்தை கல் குவாரி அமைக்க உத்தரவு பிறப் பித்துள்ளார். மேலும், ஆபத்தை விளைவிக்கும் அபாயகர மான இந்த குவாரியை மூட கிராம பொதுமக்கள் சார்பில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தங்களின் குடும்ப அட்டை களை மாவட்ட ஆட்சியர் இடத்தில் ஒப்படைத்தனர்.குவாரிக்கு ஆதரவாக திருக்கழுகுன்றம் காவல் துறை ஆய்வாளர் செயல் படுவதாகவும்,கிராம மக்கள்  மீது பொய் வழக்கு போடு வேன் என்று மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியர் இடத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட  ஆட்சியர் உடனடி யாக கோட்டாட்சியர் தலை மையில் விசாரணை குழு  அமைத்து ஆய்வு மேற் கொள்ள உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுமக்கள் குடும்ப அட்டைகளை திரும்ப பெற்று சென்றனர்.

வல்லூரில் மாசுவை வெளியேற்ற புதிய வசதி

திருவள்ளூர்,நவ.6- மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலை யம் அமைந்துள்ளது. இந்த  அனல் மின் நிலையம் தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. மேலும் இது தேசிய அனல் மின் நிலையம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூட்டு  முயற்சியாகும்.இந்த அனல்  மின் நிலையம் 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகளை கொண்டுள்ளது. இந்நிலையில் வல்லூர் அனல் மின் நிலையத்தில் ரூ.876 கோடி செலவில் மாசு கட்டுப்பாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மின்சார  ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அனல் மின் நிலையங்களில்  சல்பர் டை ஆக்சைடு வெளி யேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த வசதிகள் நிறுவப்படுகின்றன. தேசிய தலைநகர் அல்லது 10 லட்சம் மக்கள்  தொகை கொண்ட நகரங்க ளில் 10 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அனல் மின் நிலையங்கள் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க  வேண்டும் என்று மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சகம்  கடந்த 2022-ம் ஆண்டு அறி  விப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வல்லூர் அனல் மின் நிலையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த அனல் மின் நிலை யம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கூடுதலாக குடிநீர் சுத்தி கரிப்பு நிலையம் மற்றும்  கூடுதல் கட்டுமான பணி களை கருத்தில் கொண்டு செலவு தொகை சற்று அதிக மாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சாலை மறியல்

திருபெரும்புதூர்,நவ.6- படப்பை அருகே உள்ள செரப்பணஞ்சேரி ஊராட்சிக்குட் பட்ட நாவலூர் அரசு குடிசை மாற்று வாரியகுடியிருப்பில் 2800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பனப்பாக்கம் பகுதியில் இருந்து நாவலூர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும்  சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியு மாக சேதம் அடைந்துள்ளது. மேலும் குடிநீர், மின்விளக்கு  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர்.  கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்களன்று  வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில்  மறியலில் ஈடுபட்டனர்.

காவலரை இரும்பு கம்பியால்  தாக்கிய போதைக் கும்பல்

சென்னை, நவ. 6- திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் வசிப்பவர் நரேந்திரன் (48). இவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் திருமுல்லைவாயில் ஏரிக்கரை அருகே 8 பேர் கொண்ட கும்பல் மது குடித்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது நரேந்திரன் அவர்களை கண்டித்து அங்கிருந்து செல்லு மாறு கூறியுள்ளார். நரேந்திரன் சாதாரண உடையில் இருந்ததால் அந்த கும்பல் அவர் காவலர் என்று தெரியாமல் சரமாரியாக  அடித்து, இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.  அவர் மயங்கி கீழே விழுந்தவுடன் அந்த கும்பல் அங்கிருந்து  தப்பி ஓடி விட்டனர். பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு  வந்த அந்த வழியாக சென்றவர்கள் நரேந்திரனை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகாதார ஊழியர் தற்கொலை

சென்னை,நவ.6- வியாசர்பாடி, பள்ளம் 1-வது தெருவை சேர்ந்தவர் அசோக் குமார் (36). இவர் சென்னை மாநகராட்சி 6-வது மண்டலம், 71-வது வார்டில் சுகாதார ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி வீட்டில் இருந்த அசோக்குமார்  விஷம் குடித்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ஞாயிறன்று  இரவு சிகிச்சை பலனின்றி அசோக்குமார்  இறந்தார். பணியின் போது அசோக்குமாரை அதிகாரி தொடர்ந்து கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது.இதில் ஏற்பட்ட மனவேதனையில் அசோக்குமார் தற்கொலை செய்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து அசோக் குமாரின் மனைவி தீபிகா வியாசர்பாடி காவல்துறையில் புகார் செய்தார்.

47 ஏரிகள் முழுவதும் நிரம்பியது

காஞ்சிபுரம்,நவ.6- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் விட்டு,கனமழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளன.  காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 909 ஏரிகள் உள்ளது. வரும் நாட்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஏற்கெனவே நிரம்பிய ஏரிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.05 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளள வான 3,645 மில்லியன் கன அடியில் 3,132 மி.கன அடி தண்ணீர் மி.கனஅடி தண்ணீர் உள்ளது. திங்களன்று காலை  நிலவரப்படி ஏரிக்கு 188 கனஅடி தண்ணீர் வருகிறது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 18.58 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடியில் 2,726 மி.கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.

சென்னையில் ரூ. 1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை,நவ.6- சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் காரில் கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் ரூ. 1 கோடி  தனிப்படை காவலரிடம் சிக்கியது. சென்னை கலைஞர் கருணாநிதி நகர் ஆற்காடு சாலையில் உள்ள வீட்டில்  சட்டவிரோதமாக பண பரி மாற்றம் நடைபெறுவதாக தியாகராய நகர் காவல் துணை ஆணையர் தலை மையில் தனிப்படை காவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான காரை சோதனை செய்தபோது அதில் கணக்கில் வராத ரூபாய் ஒரு கோடி ரொக்க  பணம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பிறகு,காவலர்கள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஹவாலா பணம் வைத்திருந்த இலங்கையைச் சேர்ந்த  கமலநாதன், மடிப்பாக் கத்தை சேர்ந்த வேங்கட  கிருஷ்ணன், மயிலாடு துறையை சேர்ந்த கார்த்தி கேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மற்றொரு கார்த்தி கேயன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பிறகு இதையடுத்து வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், வருமான வரித் துறை கூடுதல் இயக்குநர் புலனாய்வு பிரிவு சுதர்சன்  தலைமையிலான அதிகாரி கள் பிடிபட்ட 4 பேரையும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1 கோடி பணம் கைப்பற்றி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

தீபாவளி சீட்டு மோசடி : எஸ்பியிடம் புகார்

விழுப்புரம்,நவ.6- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் சபரி வாசன் என்ற நிறுவனம் தீபாவளி  ஃபண்ட்  சீட்டு கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக அப்பகுதியை சார்ந்தவர்களிடம் பிடித்து வந்தது.இந்நிறுவனம்   ஃபண்ட்   சீட்டு நடத்தி வரும் மகேஷ் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 3500 நபர்களிடமிருந்து ரூ. 4 கோடிக்கு ஒரத்தூர், திண்டி வனம், பொன்னங்குப்பம், வீடுர், மேலக்கொந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சீட்டு  கட்டியவர்களிடம் பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பண்டு சீட்டு நடத்திய மகேஷ் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலை மறைவாகியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஃபண்ட் முகவர்கள் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

கடலூர், நவ.6- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடலூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பட்டியல் இன,பழங்குடி மக்களின் வாழ்வாதார அடிப்படை கோரிக்கைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்கான மாநிலம் தழுவிய  கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ெஜ.ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கடலூர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் பழ.வாஞ்சிநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கே. சரவணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் டி. கிருஷ்ணன், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கவிஞர் பால்கி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் திருமுருகன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கருணாகரன், விவசாயிகள் சங்கத்தின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய துணைச் செயலாளர் குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்று கையெழுத்துப் பெற்றனர்.

கோமாரி  நோய் தடுப்பூசி முகாம் 

ராணிப்பேட்டை, நவ.6 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், சர்வந்தாங்களில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி  ரமேஷ் தலைமையில் திங்களன்று (நவ.6) கால்நடை நோய் தடுப்பூசி திட்டம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் கால்நடை மருத்துவர் உதயசங்கர், கால்நடை மருத்துவர் ஹரிஹரன்,  சரத்பாபு, ரகு, வட்டாட்சியர் வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாது உப்புக்கள் வழங்கப்பட்டது. கால்நடை விவசாயிகள் தங்கள் மாடுகள் கோமாரி  நோய் தடுப்பூசிகள் தவறாமல் போட்டுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி கேட்டுக் கொண்டார். மேலும்  கோமாரி நோய் தடுப்பூசி போடுவதால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்று முன்னெச்சரிக்கையாக தடுக்கப்படும். கால்நடைகள் உயிரிழப்புகள் தவிர்க்கப் படும் என தெரிவித்தார்.

புதுச்சேரி கண்ணன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

புதுச்சேரி,நவ.6- உடல்நலக்குறைவால் காலமான புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புதுச்சேரியின் முன்னாள்  அமைச்சர் ப.கண்ணன் (74) உடல்நலக்குறை வால் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை  பலனின்றி அவர் ஞாயிற்றுக் கிழமை (நவ.5) இரவு காலமானார். புதுச்சேரி அரசியலில் தன்நிகரற்ற தலைவராக விளங்கியவர். காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல்  வாழ்க்கையை தொடங் கியவர். பிற்காலத்தில் தனி  அரசியல் கட்சியை துவக்கிய வர். புதுச்சேரி சட்டப் பேரவை தலைவர், அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இடையில் பாஜக கட்சியில் இணைந்து, பின்னர் மணிப் பூர் கலவரத்தில் ஒன்றிய  பாஜக அரசின் நடவடிக் கையால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் எந்த அரசியல் கட்சி யில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார். அரசு மரியாதை புதுச்சேரி வைசியாள் வீதியில் வைத்திருந்த கண்ணனின் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி,பேரவைத் தலை வர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ப.கண்ணன் மறைவையொட்டி புதுச் சேரியில் மூன்று நாள்  அரசு துக்கம் அனுசரிக்கப் படுகிறது. சிபிஎம் அஞ்சலி மறைந்த ப.கண்ணனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம்,செயற்குழு உறுப்பினர் வெ.பெரு மாள்,மூத்த தலைவர் தா.முருகன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  இதேப்போல் காங்கி ரஸ், திமுக, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அரசி யல் கட்சி தலைவர்கள் அன்னாரது உடல் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கருவடிக்குப்பம் இடு காட்டில் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் துப் பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

 ஒன்றிய அரசின் அடாவடித்தன நகலை எரித்து ஆர்ப்பாட்டம் 

வேலூர், நவ.6 - ஒன்றிய மோடி அரசு  நியூஸ் கிளிக்  நிறுவன பத்திரிகையாளர்கள் மீது  பொய் வழக்குப் பதிவு செய்து உபா சட்டத்தில் கைது செய்து சிறை யில் அடைத்ததை கண்டித்து முதல்  தகவலறிக்கை நகலை கொளுத் தும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பேரணாம்பட்டு பகுதி செயலாளர் நா.சே.தலித்  பாஸ்கர் தலைமையில் நடை பெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் காம ராஜ் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.சாமி நாதன், விதொச மாவட்டத் தலைவர்  பி.குணசேகரன், சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.காசி, ஜாபர் சாதிக், கேசவன், ரவி உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே ஆறுமுகம் தலைமை வகித்தார். கடலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆர்.கே.சரவணன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன், விவசாய சங்கம் மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன்,சிபிஎம் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட பலர் பேசினர்.