districts

ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சு: சிபிஐ எச்சரிக்கை

சென்னை,மே 7- அண்மையில் சென்னையில் நடை பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநரின் பேச்சும் செயலும் அதிகார வரம்பு மீறியதாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்திருக்கிறது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-  அண்மையில் சென்னையில் நடை பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநரின் பேச்சும் செயலும் அதிகார வரம்பு மீறியதாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட அமைப்பின் பெயரை குறிப்பிட்டு பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து பேசியுள்ளார். அந்த அமைப்பு பலவகையான “முகமூடிகள்” போட்டு செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி யுள்ளார். இது அவரது பொறுப்பற்ற  அரசியல் அமைப்பு சட்ட வரம்புக்குள் நின்று, ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் ஒரு அமைப்பின் மீது ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்தில் புகார் கூறுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததல்ல, ஆதாரங்கள் இருக்கும் எனில் சட்ட ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டுமே தவிர பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆத்திரமூட்டும் செயலாகும். உள்நோக்கம் கொண்டதாகும். ராஷ்டிரிய சுயம் சேவக் அமைப்பு ஒதுக்கீடு செய்த பணிகளை மேற்கொண்டு வரும் ஆர்.என்.ரவி “ஆளுநர் பொறுப்பை” முகமூடியாக பயன்படுத்தி வருவது அரசிலமைப்பு அதிகாரத்தை சிறுமைப்படுத்துவதாகும். ஆளுநர் தனது அதிகார எல்லையை தொடர்ந்து மீறி வருவது “கண்ணாடி வீட்டில் நின்று கல் எறிவதாக முடியும்” என எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.