districts

பெண் வயிற்றில் கட்டி அகற்றம்: அரசு மருத்துவர்கள் சாதனை

விழுப்புரம், ஜூன் 2- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவ மனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர் அரசு மருத்துவர்கள். பெங்களூருவை சேர்ந்தவர் தெரேசம்மாள் (74). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அவரது தம்பி அருள் பிரான்சி சுடன் வசித்து வருகிறார். தெரேசம்மாளுக்கு கடந்த சில நாட்க ளாக வயிற்று வலி இருந்ததை அடுத்து அவரை உறவி னர்கள் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவரது வயிற்றில் கட்டி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து தலைமை மருத்துவர் பிரசாந்த் தலைமையில் மருத்துவர்கள் சரண்ராஜ், ராஜலட்சுமி, திவ்யா, செவிலியர்கள் ஷீலா, ஷாகீராபானு ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது அவரது வயிற்றிலிருந்த 12 கிலோ கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.