சென்னை,ஏப்.27- கேள்வி கேட்கும் ஆற்றலை உரு வாக்கும் கல்விச்சூழலை ஏற்படுத்த வேண்டும்.அதன்மூலம் விஞ்ஞானி களை வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குநர் சுதன் கூறினார். கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் உலக புத்தக தினம் மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கணித அறிவியல் நிறு வனத்தின் இயக்குனர் முனைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். அறி வியல் இயக்கத்தின் மாநிலச்செய லாளர் ஸ்டீபன் நாதன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் எஸ். சுப்பிரமணி, அறிவியல் வெளியீடு மாநில ஒருங்கிணைப்பாளர் எம். எஸ்.முகமது பாஷா ஆகியோர் உரையாற்றினர். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் இயக்குநர் சுதன் ஏழு கணித நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அவரது தனது உரையில், கணி தமும் அறிவியலும் மக்கள் மயமாக வேண்டும். அதற்கான பணிகளை செய்ய அரசு முயற்சி எடுக்கும். கேள்வி கேட்கும் ஆற்றலை உரு வாக்கும் கல்வி சூழலை உருவாக்க வும், அதன் வாயிலாக ஏராளமான விஞ்ஞானிகளை வளர்த்தெடுக்கும் பணிகளையும் அறிவியல் இயக்கத் துடன் இணைந்து செய்வோம். அடுத்த ஓராண்டில் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் பணிகளை யும் பள்ளிக்கல்வி துறை செய்யும்.
அறிவியல் இயக்க புத்தகங்களில் தேர்வு செய்யப்பட்ட நூல்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லப் படும். புத்தகங்களை வெளியிடு வதோடு மட்டுமல்லாமல் மக்கள் வாசிப்பு இயக்கத்தையும் நடத்த வேண்டும் என்றார். நீலாங்கரை, திருவான்மியூர் அரசு பள்ளி மாணவர்கள் நூல் களைப் பெற்றுக் கொண்டனர். வர லாறு மறந்த பெண் கணித அறி ஞர்கள், கோட்டையை மீட்ட சது ரங்கள், நாட்டை மீட்ட வட்டம், கணிதத்தின் அதிசய உலகம், உயி ரை மீட்ட உன்னத எண், வேதியல் மொழியும் இலக்கண மும், வேகல் நடனம் ஆகிய 7 புத்தகங்கள் வெளி யிடப்பட்டன. இந்நிகழ்வில் புத்தகம் எழுதிய எழுத்தாளர்கள் பேராசிரியர் ரமணி, முனைவர் பிரபாகரன், குழந்தை எழுத்தாளர் ஷாலேம் ஸ்டாலின் மற்றும் விஞ்ஞானிகள், பத்திரிகை யாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்க மூத்த தலை வர்களில் ஒருவரான சி. ராமலிங்கம், துளிர் இணையாசிரியர் ஹரிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முனை வர் ஆர். இராமானுஜம் நன்றி கூறினார்.