districts

img

பாசிச நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது ஒன்றிய பாஜக அரசு மீது ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை, டிச. 14 - பாசிச நிர்வாக கட்ட மைப்பை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட 24வது மாநாட்டை சனிக்கிழமையன்று (டிச.13) தோழர் என்.சங்கரய்யா (எஸ்பிஎஸ் திருமண்டபம், சைதாப்பேட்டை) நினை வரங்கில் தொடங்கிது. மாநாட்டை தொடங்கி வைத்து ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில் கட்சியின் வரலாறு, எதிர்கொண்ட சவா ல்கள், தியாகம், சதி வழக்குகள், போராட்டங் கள், விடுதலைப் போராட்ட பங்களிப்பு போன்றவற்றை நினைவு கூர்ந்தார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: விடுதலைப் போராட் த்தை காட்டிக் கொடுத்த பாஜக ஆட்சியில் உள்ளது. 4  ஆண்டுகளாக டில்லி ஜாமியா மிலியா பல்கலை கழக  மாணவர் உமர்காலித் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் உள்ளார். பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேரில் ஒருவர் இறந்துவிட்டார். 2 பேருக்கு பிணை கிடைத் துள்ளது. எஞ்சியவர்கள் சிறையில் உள்ளனர். பாஜக, அதானியை விமர்சித்தால் கைது செய்கின்றனர். கொடூர சட்டங்கள்  ஒன்றிய பாஜக அரசு பாசிச நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக பல்வேறு சட்டங் களை திருத்தி வருகிறது. அண்மையில், சினிமா தணிக்கை சட்டத்தை திருத்தி யுள்ளது. இதன்படி, தணிக்கை செய்து, திரையிட அனுமதிக்கப்பட்ட படத்தை தடை செய்யவும், தடை செய்யப்பட்ட படத்தை திரை யிட அனுமதிக்க முடியும். அசாமில், இந்துக்களின் நிலத்தை இஸ்லாமியர்கள் வாங்க முதலமைச்சர் அனு மதி பெற வேண்டும் என்று பாஜக சட்டம் கொண்டு வந்துள்ளது. மதமறுப்பு திருமணம் செய்தால் ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் உ.பி., அரசு சட்டம் கொண்டு வந்து ள்ளது. நீதித்துறை சீர்குலைப்பு பாஜக ஆட்சியாளர்கள் நீதித்துறையையும் விட்டு வைக்கவில்லை. தங்க ளுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளை எம்.பி., ஆளுநர்களாக நிய மிக்கிறது.  நீதித்துறை மாண்பை சீர்குலைக்கிறது. அண்மையில் ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பாபர் மசூதியை இடித்தவர் களிடமே நிலத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப்ப ளித்தார். மேலும், 1991 வழி பாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை மீறி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தார். இதனை எதிர்த்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்துள்ளது. பாஜக அரசு, மநுநீதி அடிப்படையில் அரசியல மைப்பு சட்டத்தை உரு வாக்க முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ப தும், இந்துத்துவா அரசை  நிறுவுவதற்கான ஒருவழி முறையாகும். இந்துத்துவா அரசை நிறுவுவது, கார்ப்ப ரேட் நலன் காப்பது என்ற இரட்டை நோக்கோடு பாஜக அரசு செயல்படுகிறது. வலுவான போராட்டம்  இந்துத்துவா பிரச்சா ரத்திற்கு எதிரான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். மதநம்பிக் கையை மத உணர்வு, மத வெறி என்று சங்பரிவாரக் கும்பல் மாற்றுகிறது. இதற் கெதிராக மதநம்பிக்கையை மதநல்லிணக்கமாகவும், மத ச்சார்பின்மையாகவும் மாற்ற வேண்டும். நச்சுக்கருத்துக் களுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும். சாம்சங் விவகாரம் மாநில உரிமை பறிப்பு, சனாதன எதிர்ப்பு, மாநில சுயாட்சிக்காக திமுகவுடன் இணைந்து போராடு கிறோம். அதேசமயம், உழை ப்பாளி மக்களுக்கு, ஜன நாயக சக்திகளை பலவீனப் படுத்தும் கொள்கைகளை திமுக அரசு அமலாக்க கூடாது. சாம்சங் விவகாரத் தில் தொழிற்சங்க பதிவாளர் தான் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும். அதேசமயம், அர சின் தொழிலாளர் கொள்கை  என்று ஒன்று உள்ளது. அதை கவனத்தில் கொண்டு சங் கத்தை பதிவு செய்யாவிடில் அரசை எதிர்த்து போராடு வோம். இவ்வாறு அவர் பேசி னார்.