கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, தியாகதுருகம் ஒன்றியக் குழு தலைவர் தாமோதரன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் நெடுஞ்செழியன், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.