districts

அரசியலில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

சென்னை,ஜன.9- அரசியலில் இளைஞர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அலைடு மில்லன்னியல்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா (ஆம்ப்பீ) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் கவுதம் சாகர் மஹாயான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. மக்கள் பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுப்பதும் வாக்க ளிப்பதும் நமது அரசியலமைப்பால் உறுதிப் படுத்தப்பட்டுள்ள உரிமைகள் ஆகும். மாநில சுயாட்சி, அரசின் அதிகாரங்கள், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், பேச்சுரிமை, ஒன்று கூடுவதற்கான உரிமை, பயணம் செய்வதற்கான உரிமை உள்ளிட்ட பல உரிமைகளுக்கான உத்திரவாதம் முதலியவற்றை நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. இதனை ஆட்சியாளர்கள் சரியாக பின்பற்றுவதில்லை என்று அவர் சாடினார்.  இதனால்  நாட்டின் வள ஆதாரங்கள் மோசமாக நிர்வகிக்கப்படுகின்றன. திறமையும் சாதிக்கும் எண்ணமும் கொண்ட இளைஞர்கள் இதனால் பின்தள்ளப் படுகின்றனர். அவர்களது கருத்துக்கள் வீணடிக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு அரசியலில் பங்கேற்கவும் நாட்டுக்கு உழைக்கவும் நல்லதோர் வாய்ப்பை தமது கட்சி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.