districts

கல்லூரி மாணவர்கள் 7பேருக்கு 30 நாட்கள் நல்லொழுக்க பயிற்சி

சென்னை,ஆக.23-

    சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் குமார். மாநிலக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.  

     செவ்வாய் கிழமை காலை அவர் கல்லூரி செல்வ தற்காக வடபழனி பேருந்து  நிலையத்தில் பேருந்துக் காக  காத்திருந்தார். அப்போது அங்கு பிளாஸ்டிக் பைப்பு களுடன் வந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள் பிரேம் குமாரை சுற்றிவளைத்து தாக்கினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யது. இது தொடர்பாக காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பிரேம்குமார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்களான தீப கணேஷ், நவீன்குமார், தமிழ்செல்வன், அரசு, கிரிதரன், சதிஷ், அபிஷேக் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.  அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக்குப்பதிவு செய்யப் பட்டது.  

    இதைத்தொடர்ந்து மாணவர்கள் 7 பேரையும் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ் மாண வர்கள் 7 பேரையும் ஜாமினில் விடுவித்தார். மேலும் அவர்களை 30 நாட்கள் நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் சேர்க்க உத்தரவிட்டார்.  அதன்படி கல்லூரி மாண வர்கள் 7 பேருக்கு சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளி யில் சிறைத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் மாண வர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மீண்டும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நல்வழிப்படுத்தும் வகை யில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.