வேலூர், ஜூன் 9 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வேலூர் - திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் ஜி.நரசிம்மன் தலைமையில் சனிக்கிழமை (ஜூன் 8) நடைபெற்றது. சங்க கொடியை மூத்த உறுப்பினர் பி.வீரபத்திரன் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை என்.கன்னியப்பனும், துணை செயலாளர் எஸ்.காமராஜ் தீர்மானங் களையும் முன்மொழிந்தனர்.மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன் வேலை அறிக்கையையும், பொருளாளர் சி.எஸ். மகாலிங்கம் வரவு செலவு அறிக்கை வைத்த னர். பேரவையில் தவிச மாநில துணை செயலாளர் இரா.சரவணன் துவக்கி வைத்து பேசினார். இதில் வேளாண் விஞ்ஞானி டாக்டர்.எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த அனைத்து விவசாயிகளுக்கும் நஷ்ட ஈட்டினை வழங்கிட வேண்டும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி ஊரக 100 நாள் வேலை திட்டத்தை நகர்புறத்திற்கு விரிவாக்கம் செய்வதோடு, 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்திடு, ஒரு நாள் கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வன உரிமை சட்டம் 2006ஐ அமலாக்கம் செய்திட வேண்டும். வனத்தில் உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் பல ஆண்டு களாக விவசாயம் செய்து வரும் நிலத்திற்கு பட்டா அளித்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவையில் சங்கத்தின் மாவட்ட தலை வராக சி.எஸ்.மகாலிங்கம், செயலாளராக கே.சாமிநாதன், பொருளாளராக ஜி.நரசிம்மன் தேர்வு செய்யப்பட்டனர்.