காஞ்சிபுரம், ஜூலை 7 - காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில், முதலுதவி பயிற்சி முகாம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பயிற்சி முகாமுக்கு, இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் தலைவா் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். கிளையின் செயலாளா் தன்யக்குமார், இணைச் செயலாளா் முத்துக்குமரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். மருத்துவர் விக்டோரியா வரவேற்றார். தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளா்பாளர் பாலகிருஷ்ணன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். முதலுதவி செய்வது எப்படி என்று செயல்முறை விளக்கங்களுடன் மருத்துவரும், பேராசிரியருமான ஞானகணேஷ் செயல்முறை விளக்கம் அளித்தார். நிறைவாக மருத்துவா் ஆதிரை நன்றி கூறினார்.