districts

img

கடலூரில் தீ தொண்டு வார விழா

கடலூர், ஏப்.20- தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தீ தொண்டு வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஏப்ரல் 14 முதல் 20ஆம் தேதி வரையில் தீ தொண்டு வார  விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனங்களில் பதாகைகளை ஏந்தியபடி தீயில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய படி  பேரணியாக சென்றனர். கடலூர் கடற்கரை சாலையில் தொடங்கி வண்ணார பாளையம் தேவனாம்பட்டினம் வழியாக பேரணியாகச் சென்றனர். தீயணைப்பு துறை உதவி மாவட்ட  அலுவலர் ப.விஜயகுமார் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட அலுவலர் ஜி.ஆறுமுகம், தீயணைப்பு துறை சிறப்பு நிலை அதி காரிகள் வே.ராஜசேகரன், வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.