சிதம்பரம்,பிப்.10- கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். மைசூர்-மயிலாடு துறை ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். செங்கோட்டை- தாம்பரம் ரயில் , சாரதா சேது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால்-எழும்பூர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி பிப்.14 அன்று சிதம்பரம் ரயில் நிலையத்தில் தொல். திருமாவளவன் தலைமையில் மறியல் போராட்டம் நடத்துவது என்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு விசிக மாவட்டச் செய லாளர் அரங்க தமிழ் ஒளி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ அப்துல் நாசர், நகர் மன்ற துணைத் தலைவர் எம். முத்துக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் சேரலாதன், நகர செயலாளர் குமார், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூ.சி. இளங்கோவன், சிபிஐ வி.எம்.சேகர், தமிமுன் அன்சாரி, சிபிஎம் நகரச் செய லாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி நகர தலை வர் தில்லை ஆர்.மக்கின், செயல் தலை வர் தில்லை கோ.குமார், மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் பால அறவாழி, கோ.நீதி வளவன், ரயில் பயணிகள் நல சங்க தலை வர் அப்துல் ரியாஸ், நிர்வாகி வழக்கறிஞர் ஸ்ரீதர், நிர்வாக செயலாளர் ஜெ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.