விழுப்புரம், ஜன. 12- விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் சமத்துவ புரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளி கள் பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுனன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வானூர் வட்டார வளர்ச்சி அலு வலரை சந்தித்து மனு அளித்தனர். அதில், கொழுவாரி ஊராட்சியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுர பயனாளி கள் தேர்வு நடைபெற்று சுமார் 53 பயனாளி களுக்கு சமூக அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஒதுக்கீட்டில் தகுதியான பயனாளி களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை, ஏற்கனவே வீடு இருப்பவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே வீடு ஒதுக்கீடு பயனாளிகள் பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வீடு இல்லாத ஏழை எளிய தகுதியான பயனாளிகளை கண்ட றிந்து அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.