districts

img

பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பை ஆய்வு செய்க: வாலிபர் சங்கம்

திருவண்ணாமலை, ஜூலை 8- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தரடாப்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 6 ஆம் தேதி  பள்ளியின் மேற் கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும் பலத்த காயமடைந்தனர். தற்போதும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், பொருளாளர் சி.முருகன், ஒன்றியச் செயலாளர் ராஜா, தரடாப்பட்டு நிர்வாகிகள் அஜித்குமார், எழில்வாணன், கோபி, பரத், வினோத், அண்ணாமலை, ஆர்.ரவி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நலம் விசாரித்தனர். பிறகு, முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.