கடலூர்,டிச.23- ‘இதுவும் கடந்து போகும் என்ற கொரோனா கால நாவல், சிறுகதைகள் வெளியீட்டு நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெய்தலினி எழுதிய ‘இதுவும் கடந்து போகும்’ என்ற கொரோனா கால நாவல், சிறுகதைகள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் பால்கி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் கேத்தரின், கவிஞர் வெற்றிச்செல்வி, எழுத்தாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய விமர்சகர் ஜெ.ராஜேஷ் கண்ணன் வரவேற்றார். சாகித்யஅகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். கவிஞர் கனிமொழி நூலை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, சவுத் விஷன் புக்ஸ் முதன்மை ஆசிரியர் பாலாஜி, எழுத்தாளர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, சந்திரன், இளங்கோவன், ஜானகி ராஜா, சிந்தாமணி, சுதா உள்ளிட்ட ஏராளமானோர் கருத்துரை வழங்கினர். சவுத்விஷன் புக்ஸ் த.நீதிராஜன் ஏற்புரை நிகழ்த்தினார். ஜி.வைத்திலிங்கம் நன்றி கூறினார்.