districts

img

தொழில் நெறி காட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஓசூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஞாயிறன்று (மே 22) நடைபெற்றது. முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், மதியழகன்,  ராமச்சந்திரன், ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.