செங்கல்பட்டு, ஏப். 29- பெண்கள் பணிபுரியும் இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சங்கத்தின் இளம் பெண்கள் மாநாடு செங்கல்பட்டில் மாவட்டக்குழு உறுப்பினர் இரா.மணிமேகலை தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் இரா.சதீஷ் வரவேற்றார், சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் மு.பிரியங்கா, மாவட்ட செயலா ளர் ச.ஜீவானந்தம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாதர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ஜி.ஜெயந்தி, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர் மாநாட்டை நிறைவு செய்து வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.பாரதி பேசினார் சுந்தர் நன்றி கூறினார். பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், பாலின சமத்து வத்தை நிலைநாட்ட வேண்டும், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும், பெண்க ளுக்கு எதிரான குற்றங்களில் உடனடி விசாரணையும், அதற்குரிய தண்டனையை யும் உறுதிபடுத்த வேண்டும், பெண்கள் பணி புரியும் இடங்களில் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த விசாக கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.