districts

img

சுங்க கட்டணத்தை குறைக்க சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தல்

கடலூர், செப். 3- சுங்கக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என சாலை போக்குவரத்து தொழிலாளர் பேரவை வலி யுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் மாவட்டப் பேரவை கூட்டம் சிஐடியு மாவட்ட இணைச் செய லாளர் வி.திருமுருகன் தலை மையில் நடைபெற்றது. செயலாளர் எஸ்.சண்முகம் வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் பேரவையை துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்டத் தலை வர் பி.கருப்பையன் பேர வையை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டம் 2019ஐ கைவிட வேண்டும், இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையும், எப்.சி கட்ட ணத்தையும் குறைக்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஓட்டுநர் களுக்கு சலுகைகளை உயர்த்தி வழங்க வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும், வீடு இல்லாத மோட்டார் வாகன தொழி லாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் மாவட்டத் தலை வராக வி.திரு முருகன், செயலாளராக எஸ்.சண்முகம், பொருளாள ராக எஸ்.அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

;