விழுப்புரம், பிப். 13- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திரு வண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கான மண்ட லக் கூட்டம் மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி தலைமையில் விழுப்பு ரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் டி.பழனிவேல், மண்டலச் செயலாளர் ஆர்.சிவராஜ், மாநில செயற்குழு உறுப்பி னர் என்.தேசிங்கு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பயனாளிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வாரியம் தரமான தள வாடப் பொருட்களை வழங்க வேண்டும், மின் வாரி யத்தில் 1.12.2019 இருந்து பொறியாளர் முதல் களப்பிரிவு பணியாளர்கள் வரை வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும், மின் துறை, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களை தனியார்மய மாக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 28, 29 தேதிகளில் நடை பெற உள்ள பொது வேலை நிறுத்தத்தில் மின் ஊழி யர்கள் பெருந்திரளாக பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திட்ட செய லாளர்கள் விழுப்புரம் ஆர். சேகர், கடலூர் என்.தேசிங்கு, கள்ளக்குறிச்சி கே. சீனுவாசன், திருவண்ணா மலை எம்.பாலாஜி, ஓய்வு பெற்றார் நல அமைப்பு எம்.புருசோத்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.