மாமல்லபுரம், ஜூன் 14-
மாமல்லபுரம், கோவளம் சாலையில் உள்ள “ரேடிசன் புளூபே” ரிசார்ட்டில் இன்று ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு அங்கமான, டபிள்யூ-20 மாநாடு தொடங்குகிறது. இதில் பல்வேறு நாட்டு பெண் மருத்துவ பிரதிநிதி கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பெண்கள் மகப்பேறு, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கருத்துக்கள், அறிவியல் வளர்ச்சி, மருத்துவ பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பல்வேறு நாட்டு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. நாளை வரை நடக்கும் இந்த மாநாட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாள் மாநாட்டிற்கு வரும் பிரதிநிதிகள் 17-ந் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் ஆகிய புராதன சின்னங் களை சுற்றி பார்க்க உள்ளனர். இதைத்தொடர்ந்து 18, 19-ந் தேதிகளில், தொல்லியல் துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மாநாட்டு குழுவி னர் பங்கேற்க உள்ளனர். இதை யடுத்து மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீ சார் தடை விதித்துள்ளனர்.