தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் சுப்ராயலு தலைமையில் கொள்கைப் பரப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் பெருநற்கிள்ளி, கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் மலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.